Posts

Showing posts from December, 2013

ஆதலினால் காதல் மட்டும் செய்தது போதும் போதும்!!!

Image
ஆதலினால் காதல் மட்டும்  செய்தது போதும் போதும்!!! என் இனிய இளைஞர்களே!!! போதும் போதும்  இதுவரை... காதல் காதல்  என்றே உளறி, காலம் தந்த  எல்லா உணர்வும்  வீணாய் போனது  போதும்!!! அன்னை தந்தை  அக்கா தங்கை  அண்ணன் தம்பி  உறவை வெறுத்தது  போதும்!!! சாதியை ஒழிக்கும்  என்றே சொல்லி  நாட்டின் வளமும்  வீட்டின் நலமும்  இழந்து நிற்கிறோம்  போதும்!!! கன்னியின் நினைவில்  காதலின் கனவில் சிற்றின்ப நிலையில்  எல்லாம் இழந்தது  போதும்!!!  பார்வை இருந்தும்  கண்களை மறக்கும்  மெய்யா பொய்யா  உணரா நிலைமை  போதும்!!! அறிவும் பண்பும் செயலின் திறனும்  நிறைய இருந்தும்  நன்மை இழந்தது  போதும்!!! அறிவியல் அறமும்  சமூக அறிவும்  நம்மை விட்டு தூரம் சென்றது  போதும்!!! ஐந்தாம் வேதம்  எட்டாம் அதிசயம் என்றே  ஊரை உறவை,  நம்மை நாமே  ஏய்த்து கொண்டது  போதும்!!! என் அருமை கவிஞர்களே!!! மானாய் குயிலாய்  மயிலாய் நிலவாய்  தேனாய் மலராய் இன்னும் பலவாய்  பெண்ணை மெதுவாய்  அடிமை கண்டது

வழிகாட்ட வேண்டாமா?!?!

Image
சந்தனமாய் மனமும் இல்லை, முழு நிலவாய் ஒளியும் இல்லை,  அறிவுடன் அன்பும் இல்லை,  பரிவுடம் பண்பும் இல்லை,  இல்லை என்ற கூட்டமும்  உண்டு என்ற கூட்டமும்  ஒன்றுமில்லா மக்களை  சுரண்டித்தான் வாழ்கிறது இறைவனிடம் கேட்கவில்லை?!?! யார் வாழ்க்கை யார் கையில்  கேட்பதற்கு நாதியில்லை  போராட்டம் என்பதெல்லாம்  பொய்வேடம் ஆனதனால்  போராடும் தலைவன் எல்லாம்  மண்ணுக்கும் விண்ணுக்கும்  விடுப்பிலே சென்ற பின்னால்   இருப்பதில் ஒரு சிலரும்  வெறுப்பிலே போன பின்னால்  இருப்பது  நம்பிக்கையே  எதிர்வரும் தலைமுறையின்  வைரங்கள் காத்திடுமா!?!?! இல்லை...  முன்னோர்கள் முட்டாள்  என நம் போல புரியாமல்  புலம்பிடுமா ?!?! வழிகாட்ட வேண்டாமா?!?!