Posts

Showing posts from July, 2014

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

Image
கவிஞர் வாலி அவர்களின் தமிழ் புலமையும் வளமையும் உணர வேண்டுமானால் அவரது தனி கவிதை தொகுப்புகளை படித்து பாருங்கள் அவர் எத்தகைய சிறப்பான கவிஞர் என்பது புலப்படும்  இதோ அவரின் முத்தான தனி கவிதைகளில் என் மனம் கவர்ந்தவைகளில் சில .... அதென்ன வாலி என பேரு ஆனா வால் இல்லையே என்ற விமர்சனத்துக்கு எழுதிய பதில் கவிதை, " வாலில்லை என்பதனால் வாலியாகக் கூடாதா? காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?"   நமக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ!?!?  என்று திரு நாகேஷ் அவர்கள் இளமை காலங்களில் போட் கிளப்பில் ஒன்றாக இருந்த போது புலம்பிய வேதனைக்கு ஆறுதலாய் தந்த கவிதை ... "கால மகன் கட்டிவைத்த ஆலமர ஊஞ்சலிலே  ஏழை மக்கள் ஆடுகின்றார் ஆராரோ ஆராரோ  இதில் எதிர்கால மன்னவர்கள் யார் யாரோ? யார் யாரோ?" கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் பலியான பொழுது சிந்திய கண்ணீர் கவிதை  "கோவில்கள் அதிகம் கொண்ட ஊராமே குடந்தை - அப்படியென்றால்  இந்த அக்கிரமத்திற்கு அத்துணை தெய்வங்களுமா உடந்தை" ஹைக்கூ !!! தன் தலையைச் சீவியவனுக்கே ! தண்ணீர் தருகிறது இளநீர்  தன்  தோ லை உரித

கவிஞர் வாலி !!! - "புடவை கட்டியது போதுமென வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி" - 18-07-2014 - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Image
கவிஞர் வாலி !!! யார் தெரியுமா - கவிஞர்களின் தலைவா நீ!!! புடவை கட்டியது  போதுமென  வே ட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி !!! கவிஞர் பா. விஜய் அவர்களின் வடித்த கண்ணீர் வரிகள் இவை !!! தமிழ் திரைக்கவிஞர்களில் அதிகம் கவனிக்கபடாமல் கவனிக்கப்பட்டவர், தமிழ் திரைப்பாட்டு வரலாற்றில் வாலி பாடல்கள் என்பது எந்நாளும் ஒரு அடையாளமாகவே இருக்கும் ...இருந்துகொண்டே இருக்கிறது என்பதே நிஜம்  பாட்டு என்பது ஒரு கதையில் வரும் சூழலுக்கு அதில் தொடர்புடைய கதாபாத்திரம் பாடுவதாக அமைய வேண்டும் அதே சமயம் கவித்துவமாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருப்பதே நன்று...இது போல செய்தவர்களே திரை உலகில் சாதித்திருக்கிறார்கள் ஏனெனில் கவித்திறமை என்பது வேறு திரைப்பாட்டில் கவிதை என்பது வேறு... திரைக்கு பாட்டு என்பதற்கு வாலியின் பின் வரும் ஒரு கவியரங்க கவிதையே மிக எளிமையாக விளக்கம் தரும்.., இங்கே நான் வண்ணமொழிப் பிள்ளைக்குக் தாலாட்டும் தாய்; அங்கே நான் விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்! மேலும்… எந்தப்பா சினிமாவில் எடுபடுமோ? விலைபெறுமோ? அந்தப்பா எழுதுகிறேன்;