Posts

Showing posts from November, 2014

சிந்தனை செய் மனமே...

Image
இன்றைய நிலை  சக பயணியின் கரங்களுக்கு  இருக்கையின் கைப்பிடியை  மறுக்கும் மனிதர்களே  - இங்கு  பன்னாட்டு நிறுவனங்களின்  இயற்கைவள சுரண்டல்களை  முகநூலின் திரை கிழிய எழுதுகிறார்!!! வீட்டில் வேலை செய்வோர்   கேட்ட ஊதிய உயர்வுக்கு  நூறுமுறை கேள்வி கேட்ட  நுட்பமான வித்தகர்தாம்  - இங்கு  விலைவாசி உயர்வு பற்றி  விளா எலும்பு நோக விளிக்கின்றார்!!! தன் மக்கள் தன் குடும்பம்  தன் பிள்ளை தன் வாழ்வு  என வாழும் வெட்கமில்லா  வள்ளல் தெய்வங்களே - இங்கு  பொறுப்பில்லா அரசியல்  என்றே உணர்வுகளில் பொங்குகிறார்!!! வறுமையின் கொடுமை தீர்க்க  நாட்டில் நலன்கள் செழிக்க  உண்மையாய் உழைத்த  உத்தமர்களை தேடி அலுத்த  பாரத அன்னை இப்போ  பரலோகம் பார்த்து  கண்ணீரில் கரைகின்றாள் !!! எண்ணமும் எழுத்தும்  குருஸ்ரீ