Posts

Showing posts from April, 2015

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 14-04-2015

Image
  தித்திக்கும் மொழியெனவே எத்திக்கும் மணம் சேர்க்கும்  முத்தமிழே, முது மொழியே, மூவாத உயர் தமிழே, தத்தி வரும் பிள்ளை எந்தன்  மங்காத   புத்தி வழி மன்னவரும் விண்ணவரும் வாழ்த்திடும்  நற் கவிதையினை தா!! நீர் வளமும் நில வளமும் எங்கெங்கும் நிறைந்திடவே- எங்கள்  குலம் பேர் பெறவும் சீர் பெறவும் நல் வழியை தா !! தொழில்  வளமும்   அறிவியலும் வளம்பெறவே- எங்கள்  அறிவினிலே நல்லறமென்னும் அருளினையே தா !!  - குருஸ்ரீ  நிறைவான அறிவுடனே  நித்தமும் நான்  மகிழ வேண்டும் !! குறைவில்லா குணமெனவே  சுற்றம் எனை புகழ வேண்டும் !! இல்லாதோர் இல்வாழ்வில் என்னாலே வளம் சேர வேண்டும் !!  பெற்றவர், உற்றவர்,மற்றவர் அனைவரும் வாழ வேண்டும் !! ஸ்ரீ சபரி மாமலையில் வாழ்கின்ற தெய்வத்தின்  அருள்  எந்நாளும் என்னோடு வேண்டும் !! வேண்டும் !!  - குருஸ்ரீ 

விரல் எழுதும் அழுகை குரல் !!! Jeyakanthan & Nagoor Hanifa demise

Image
நேற்றோடு ஓய்ந்தது ??!!?? தமிழை தமிழால் சிறப்பித்த விரல் !!?? அந்த விரலிளிருந்து எழுத்தாய் வந்தது பாமரனின் குரல் ?!?!?! அது "ஜெயகாந்தன்" எனும் ஓர் எழுத்தாளரின் விரல் !!! நேற்றோடு ஓய்ந்தது ??!!?? தமிழை இசையால் குளிர்வித்த குரல் !!?? தன் குரல் கொண்டு தந்ததெல்லாம் தமிழிசையின் திரள் ?!?!?! அது "ஹனிபா" எனும் ஓர் பாடகரின் குரல் !!! இதுவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு இல்லை  இவர்களைப்போல் நகல் ?! இனி தமிழ் எழுத்துக்கும், தமிழ் இசைக்கும்  உண்டா??? ஓர் பகல்?!?!?! இது தமிழ் மேல் காதல் கொண்ட பாமரனின்  விரல் எழுதும் அழுகை குரல் !!! - குருஸ்ரீ 

ஒவ்வொரு முறையும்!!!! TRY TRY AND TRY AGAIN!!! LIFE IS CRAZY....Thinking in GSri way?!?!

Image
ஒவ்வொரு முறையும், தோல்வியின் வலியில்  வானம் பார்க்கையில் வெண்ணிலா... நாளும் தேய்ந்து வளர்ந்து என்மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது ?!?! ஒவ்வொரு முறையும், அதிர்ஷ்டமில்லாதவன்!! என ஏங்கும் பொழுதில்   செடிகள்... உதிர்வதறிந்தும் தினமும் மலர்ந்து என் கவலை நீக்குகிறது ?!?! ஒவ்வொரு முறையும், இனி என்ன செய்வது? என எண்ணும் நொடியில் கடிகாரம்... ஓயாமல் ஓடி காலத்தை வென்று என் மனம் தேற்றுகிறது ?!?! ஒவ்வொரு முறையும் கேலிக்கு உள்ளாகி வீழ்ந்திடும் நிலையில்  நிலைக்கண்ணாடி... என் பிம்பத்தின் வழியில் உள்ளத்தை உறுதியாக்குகிறது ?!?! ஒவ்வொரு முறையும் மீண்டும் முயலத்தான் போகிறேன் ஏனெனில்  வாழ்க்கை... ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையை தந்துகொண்டிருக்கிறது ?!?! - குருஸ்ரீ