காலனுக்கு வெட்கமில்லை - கடவுளுக்கும் இரக்கமில்லை !!!???


மவுலிவாக்கம் மரணவாக்கம் ஆனது
கட்டிடம் கல்லறை ஆனது
கடவுள் ஏன் கல் ஆனது !???!


உழைப்புக்கேற்ற ஊதியம் அன்றாடம் கையோடு 
உண்மையான மக்கள் உண்டு உளமான அன்போடு
உன்னதமாக வாழ மனம் நிறைய கனவோடு 
எண்ணிதானே வடக்கிலிருந்து வந்தார்கள் தமிழ்நாடு-!!??!!
அவர்கள் சவமாய் போகவா!?!? , கோரமான இடிபாடு?!?!

இறைவா !!!
உன் செவிகளில் கேட்கவில்லையா எங்கள் கூப்பாடு
இமைமூடி களிக்கவா?!? தினந்தோறும் உனக்கு வழிபாடு ?!?!

சிக்கித்தவிக்கிறது ஒருபாவமும் அறியாத உயிர்கள் அங்கே
அவர்களை மீட்க்க உழைக்கும் நல்ல மனிதர் இங்கே
 

காலனுக்கு வெட்கமில்லை -
கடவுளுக்கும்  இரக்கமில்லை !!!???
இதை சொல்லி பயனில்லை ...


அக்கறைஇல்லாத வியாபாரம்
அலட்சியத்தின் ஒய்யாரம் 
 
நாற்பதுக்கும் மேலே உயிர்கள் பலியானது
மரணம் மிகவும் மலிவானது 


பணத்திற்காக எதையும் செய்தோம் - சொந்த
இனத்தையே வதையும் செய்தோம் 

இனியாவது அன்னை பூமியில்
உயிர்கள் விதைப்பதை நிறுத்துவோமா !!??
இல்லை இதுவும் இன்னொரு செய்தியென்று
அநியாயத்தை தொடர்ந்து நடத்துவோமா!?!?!

...வேதனையுடன்  - குருஸ்ரீ  

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!